உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிவிருத்திக்கு செயற்படவேண்டும்

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தலைமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் .

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க