உள்நாட்டு செய்திகள்புதியவை

அசிட் தாக்குதல் நடத்தியவர் உயிரிழப்பு

பெண் ஒருவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை ஆசிட் கொண்டு தாக்கிய நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கேகாலையில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் குறித்த அந்த பெண்ணை துப்பாக்கியில் சுட முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதோடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணும் அவரது குழந்தைகளும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க