உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கில் இராணுவ அதிகாரி கைது

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷவை குற்ற புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட ஊடகவியலாளரின் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகள் ராஜபக்ஷவின் உடையது என கண்டறியப்பட்ட நிலையில் கைது நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மருதானையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்தார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (ஜூலை 8) கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஊடகவியலாளர் தென்னகோன் 23 ஜனவரி 2009 அன்று இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது அவரது மனைவியும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க