உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

அட்டன் ஸ்ரீபாத கல்லூரியின் பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் எம்.ராம், சோ. ஸ்ரீதரன், அட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அட்டன் ஸ்ரீபாத கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த கல்லூரியின் பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க