உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் ஏற்பட்ட பாரிய நட்டம்

இலங்கை மின்சார சபை கடந்த நான்கு மாதத்துக்குள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 23 .1 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை நிதி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

கடந்த வருடம் இலங்கை மின்சார சபைக்கும் 17.5 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே நாட்டம் ஏற்பட்டிருந்தது இருந்தாலும் அது தற்போது 5 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்டத்திற்கு காரணம் முக்கியமாக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் உட்பட்ட பல்வேறு விடயங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தில் இருந்து மாத்திரம் 103.1 பில்லியன் ரூபாய் வருமதியாக மின்சார சபைக்கு வர வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க