உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் நாளை (09) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இதனைமுன்னிட்டு இன்று (08) முற்பகல் நாடாளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், சபாநாயகர் சந்திப்பு நடத்தினார்.

ஜுலை மாதத்துக்கான முதல்வார சபை அமர்வு நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை நடைபெறவுள்ள நிலையில் இதன்போது விவாதிக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்படி திட்டமிட்டபடியே 10 ,11 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லாப்பிரேரணைமீது விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், காணி விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க