உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

முப்படை தளபதிகளுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (07) அவசரமாகக் கூடியது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்றிரவு (08) வெளிநாடு செல்லவுள்ளார்.

இதன்காரணமாகவே அமைச்சரவைக் கூட்டம், தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் ஆகியவற்றை முன்கூட்டியே அவர் நேற்று நடத்தியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டமானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும், அன்று மாலை பாதுகாப்பு சபைக் கூட்டமுமம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் சனிக்கிழமையே அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்தளவு அமைச்சர்களே நேற்றைய சந்திப்பில் பங்கேற்றனர் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் படைத் தளபதிகள், பதில் காவல்துறைமா அதிபர் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க