வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர , தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க பிரதிநிதிகள் டோஹாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  எனினும் போர் நிறுத்தம் செய்ய மாட்டோம் என கூறி தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் கஜினி நகரில் உளவுப் படையினரை குறி வைத்து , வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்துள்ளனர். இதில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 179 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க