உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அழுத்தத்தின் மத்தியிலேயே அமெரிக்க உடன்படிக்கையில் கையெழுத்து

அமெரிக்கா இலங்கையுடன் ஏற்கனவே செய்து கொண்ட ACSA என்ற பாதுகாப்பு உடன்படிக்கையும் எதிர்காலத்தில் செய்துகொள்ள உத்தேசித்துள்ள SOFA என்ற உடன்படிக்கை தொடர்பிலும் சர்ச்சைகள் தோன்றியுள்ளன.
இதில் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ACSA உடன்படிக்கை யாருக்கும் தெரியாமலேயே செய்யப்பட்டுள்ளது.
2017 மே 5ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் அட்டுல் கெசாப்பும் இலங்கையின் சார்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில ஹெவாவித்தாரனவும் கையெழுத்திட்டனர்.
இந்தநிலையில் தாம் இந்த உடன்படிக்கையில் அழுத்தத்தின் மத்தியிலேயே கையெழுத்திட்டதாக கபில ஹெவாவிதரான தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க