உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மீன்வளர்ப்பை மேம்படுத்தும் வேலை திட்டம்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தில் 5 இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சந்தையில் மீனுக்கான கேள்வியை அதிகரித்தல் என்பன இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க