உள்நாட்டு செய்திகள்புதியவை

மில்லியன் கணக்கில் கொள்ளை: ஒருவர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் ரூ .4.3 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டிவல களனி பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சப்புகஸ்கந்த காவல்துறை அதிகாரிகள் குழு இன்று சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தங்க
நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்புரிய பகுதியில் வசிக்கும் 48 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க