உள்நாட்டு செய்திகள்புதியவை

24 மணி நேரத்திற்குள் 433 வாகன சாரதிகள் கைது

இன்று காலை 6.00 மணி முதல் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 433 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையை இலங்கை காவல்துறை வெள்ளிக்கிழமை (05) அறிவித்தது.

இதன் படி நேற்று (6) காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை 24 மணி நேரத்திற்குள் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 433 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெள்ளிக்கிழமை முதல் கைது செய்யப்பட்ட மொத்த சாரதிகள் எண்ணிக்கை 796 ஆக உள்ளது.

கருத்து தெரிவிக்க