புதியவைவிளையாட்டு செய்திகள்

சரிவில் இருந்து இலங்கை அணியை மீட்ட மெத்யூஸ், திரிமன்னே

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி இந்திய அணிக்கு 265 ஓட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த  போட்டியில்  நாணயசுழட்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.  இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்ன மற்றும் குசல்  பெரேரா களமிறங்கினர்.

இதில் கருணாரத்ன 10 ஓட்டங்களிலும் , குசல் பெரேரா 18 ஓட்டங்களிலும் , ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த குசல் மென்டிஸ் 3 ஓட்டத்திலும் , அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

55 ஓட்டங்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து இலங்கை அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.

இந்நிலையில் நிதானமாக ஆடி மெத்யூஸ் 113 ஓட்டங்களை பெற்று அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்துள்ளார்.

இதேவேளை திரிமன்னே 53 ஓட்டங்களையும் தனஞ்செய டி சில்வா 29 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.

தற்போது இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க