விளையாட்டு செய்திகள்

தீர்மானமிக்க போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தீர்மானமிக்க முக்கிய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

44ஆவது இந்த லீக் போட்டி இன்று சனிக்கிழமை லீட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்திய அணி 13 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இதில் வெற்றி பெற்றால் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

இதேவேளை, தோல்வியை சந்தித்தால் 3ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

கருத்து தெரிவிக்க