உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அதிகாரம் இருந்தால் ஒருவரையும் சவுதிக்கு அனுப்ப மாட்டேன்’

பௌத்தர்களுக்காக செயற்படும் அமைச்சர், எனினும் ஏனைய சகோதர இனத்தவர்களை ஒடுக்கும் தன்மை தன்னிடம் இல்லை என பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முகத்தை மூடும் ஹிஜாப் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வந்தது என்றும், முஸ்லிம் அடிப்படைவாதமும் சவுதியில் இருந்தே இலங்கைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

கட்டுப்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருந்தால் சவுதி அரேபியாவுக்கு ஒரு இலங்கையரையும் அனுப்பமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க