உள்நாட்டு செய்திகள்புதியவை

சமூக ஊடகத்தில் இனமுறுகலை ஏற்படுத்தியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சமூக ஊடகங்களில் இனரீதியான கருத்துக்களை வெளியிட்ட தொழிலதிபர் ஒருவருக்கு ஜூலை 19 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை சிலாபம் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா ரத்நாயக்க இன்று பிறப்பித்துள்ளார்.

சிலாபத்தில் வசிக்கும் வசிக்கும் 35 வயதான ஏ.எச். முகமது அஸ்வர், அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையைத் தூண்டிய நிலையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க