உள்நாட்டு செய்திகள்புதியவை

முள்ளியவளை பிரதேசத்தில் விவசாயியின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்,முள்ளியவளையினை சேர்ந்த 45 அகவையுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தர் காஞ்சிரமோட்டையில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இவரது விவசாய கிணற்றில் இவர் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இன்று காலை முள்ளியவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டு மாஞ்சோலை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்கள்.

மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க