உள்நாட்டு செய்திகள்புதியவை

தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உட்பட முக்கிய தலைவர்கள் சிலரை சாட்சியமளிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை தெரிவுக்குழுவுக்கு அழைகைப்பட உள்ளனர்.

விசாரணைகளின் பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவுக்குழு விசாரணை நிறைவடையும் என்று அவர் கூறினார்.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பு ஜனாதிபதியால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறினார்.

கருத்து தெரிவிக்க