உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

காங்கேசன்துறை பகுதியில் பவளப்பாறை கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் புதிய பவளப்பாறை ஒன்றை காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட மற்றொரு பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டம் ஒன்று நேற்று வடக்கு கடற்படைத் கட்டளையின் காங்கேசன்துறை கடற்கரையில் தொடங்கப்பட்டது.

தற்போது பல காரணங்களால் தொடர்ச்சியான அழிவுக்கு உட்பட்ட பவளப்பாறைகளை பாதுகாப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

அதன்படி, கடற்படை அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 பாறை துண்டுகளில் பவள மறு நடவு செய்யப்பட்டன.

இந்த திட்டத்தை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர முழு மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

மேலும், இத் திட்டம் கடற்படையின் பசுமை மற்றும் நீல கருத்தாக்கத்துடன் (நீல ஹரித சங்கிராமய) கைகோர்த்து செயல்பட்டு, தீவு முழுவதும் பல கடற்கரை பகுதிகளில் தற்போது பல பவளப்பாறைகள் மறுசீரமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க