உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை- மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

காத்தான்குடி பிரதேசத்தில், ஷரியா சட்டத்தின் படி இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார்.

வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறுதல் மற்றும் இராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த காரணங்களுக்காக காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேருக்கும் அதிகமானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வஹாப் அடிப்படைவாதத்துக்கு இல்லாதொழிப்போம் என்ற பெயரில் நேற்று நுகேகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் கூறியுள்ளார்.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆகவே தமக்கு எதிராக சவால் இருப்பதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனவும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க