உள்நாட்டு செய்திகள்புதியவை

பதவிக் காலம் உயர் நீதிமன்றத்தை நாடும் ஜனாதிபதி!

தனது பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோர ஜனாதிபதி தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை,நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பாகவே ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி எடுத்துள்ள இந்தத் தீர்மானமானது நாகரீகமான ஒரு நடவடிக்கை தான் கருதவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி தனது பதவியில் ஒரு நாளாவது கூடுதலாக இருப்பதற்கு எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் ரமேஸ் பதிரன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க