உள்நாட்டு செய்திகள்புதியவை

சஹ்ரானின் குழு தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டம்!

சஹ்ரான் ஹாஷிமின் குழு கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று சஹ்ரான் ஹாசிம் உட்பட்ட குழுவினர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்த 11 பேர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் களவாஞ்சிக்குடி பிரதேச தேவ மண்டபத்திற்கும் தாக்குதல் நடத்த சஹ்ரான் ஹாஷிமின் குழு திட்டமிடப்பட்டுருந்தாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க