உள்நாட்டு செய்திகள்புதியவை

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: இராணுவ அதிகாரி மீது விசாரணை

காலி அக்மீமனவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் அக்மீமனவில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் பலவந்தமாக நுழைய முயன்ற நபர் மீது இராணுவ அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து குறித்த நபர் கராபிட்டி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

குறித்த இராணுவ அதிகாரி மீதான முதற்கட்ட விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என தெரிய வந்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க