உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தங்க பிஸ்கட்டை கடத்திய வெளிநாட்டு நபர் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான குறித்த பயணி, பிரான்சில் இருந்து ஓமான் ஊடாக இலங்கைக்கும் நேற்று பிற்பகல் 3.20 மணி அளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பிஸ்கட் பொதி ஒன்றில் மறைத்தே தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க