உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பிரபாகரன் குறித்து ஜனாதிபதி கூறிய கருத்து தவறு

போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின்  குற்றச்சாட்டு தவறானது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்திருக்கின்றார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க