உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அம்பாள்புரம் மீனவர்களுக்கு வலைகள் வழங்கி வைத்தார் எம்.பி. மஸ்தான்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்குகின்ற நிகழ்வு நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் அம்பாள் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய காதர் மஸ்தான் அவர்களுடைய இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமாக குறித்த பகுதியில் இருக்கின்ற மீனவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க