உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

கேப்பாப்புலவு ராணுவ படை பிரிவின் அருகாமையில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது

குறித்த குண்டு வெடிப்பு சத்தம் கேப்பாப்புலவு முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் இந்த குண்டுச்சத்தம் குறித்த நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து அங்கு தீ வைத்த வேளையிலே இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது

இதன்போது யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது

கருத்து தெரிவிக்க