உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை உட்பட்ட நாடுகளில் இணையக் கொள்ளை குழுவினர்

இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட குழு ஒன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவை தலைமையகமாகக் கொண்ட குரூப்-ஐபி என்ற மென்ரக நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தக்குழு பங்களாதேஸில் உள்ள டச் பங்க்ளா வங்கியின் மீது இணையத்தாக்குதல் நடத்தியதில் 3மில்லியன் டொலர்கள் வரை நட்டமேற்பட்டுள்ளது.

இந்த இணையத்தாக்குதல்தாரிகள் “சைலன்ஸ்” (அமைதி) என்ற அழைக்கப்படுகின்றனர்.

இந்த அமைதிக்குழுவினர் இந்தியா,இலங்கை மற்றும் கஸ்கஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

எனினும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களின் பெயர்களை வெளியிடமுடியாது என்றும் குரூப் ஐபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க