உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

தமிழர்களின் நிலவுரிமையை உறுதிப்படுத்த “தமிழர் திருவிழா

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் அதே ஆலயத்தில் நாளை மறுதினம் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் பலத்தை காண்பிக்கும் வகையில் இளைஞர்கள், யுவதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்ப் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டோரை மதங்களை கடந்து தமிழர்களாய் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் விபரம் வருமாறு

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பேருந்துகளில் ஒன்று தெல்லிப்பளை – துர்க்கை அம்மன் ஆலயத்தடியில் இருந்து காலை 6.30 மணிக்கு KKS வீதியூடாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து சாவகச்சேரி, கொடிகாமம் பேருந்து நிலையங்களில் நின்று முல்லைத்தீவிற்கு செல்லும் அதேவேளை, மற்றுமொரு பேருந்து யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு யாழ் பல்கலைக்கழகம் சென்று அங்கிருந்து பருத்தித்துறை வீதியூடாக நெல்லியடி, கொடிகாமம் சென்று புதுக்காடு சந்தி வழியாக முல்லைக்கு செல்கிறது. (தொடர்பு: ராஜஸ்ரீ – 0772124654 மற்றும் நெல்லியடி, பருத்தித்துறை மக்களிற்கு: மகிந்தன் – 0777110955.)

திருகோணமலை – சிவன்கோவிலடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நிலாவெளி, திரியாய் ஊடாக முல்லைக்கு செல்லும். (தொடர்பு: விவேகானந்தன் – 077377021

வவுனியா – பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு முல்லைக்கு செல்கின்றது. (தொடர்பு: பிரணவன் – 0776084108.)

மன்னார் – வண்ணாங்குளம் பகுதியில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு திருக்கேதீஸ்வரம் சந்தியூடாக ஏ-32 சாலை சென்று மாங்குளம் ஊடாக முல்லையை சென்றடையும். (தொடர்பு: தீபன் – 0770771236.)

கிளிநொச்சி – டிப்போச் சந்தியில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பரந்தன், விசுவமடு, தேவிபுரம் ஊடாக புதுக்குடியிருப்பு சென்று முல்லைக்கு பயணிக்கும். (தொடர்பு: துஷாந்த் – 0772479023.)

கருத்து தெரிவிக்க