உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 177 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!

தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 177 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.

அத்துடன்,வவுனியா வடக்கு, மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான குடி தண்ணீர் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சிபுரம், தட்டான்குளம், ஆசிகுளம், கற்குளம் பகுதிகளிலும் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க