உள்நாட்டு செய்திகள்புதியவை

மாகந்துரே மதூஷ் டுபாயிலிருந்து திட்டமிட்டு குற்றச்செயல்களை செய்துள்ளார்!

பாதாள உலகக் குழுவின் தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதூஷ் டுபாயிலிருந்து திட்டமிட்டு குற்றச்செயல்களை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவமும் பிலியந்தலையில் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகமும் முக்கியமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கொஸ் மல்லி என்பவரை கொலை செய்தமையும் 700 கோடி ரூபாய் பெறுமதியான வைரத்தினை கடத்தியமையும்  அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதூஷ் மீது தொடர்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க