உள்நாட்டு செய்திகள்புதியவை

கிளிநொச்சி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தின் போது, லொறி மற்றும் டிப்பர் ஆகியவற்றின் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 32 வயதானவர் எனவும் மற்றையவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 40 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க