உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தொடருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

தொடருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது முதல் தொடருந்து ஊழியர்கள் கடமைக்கு திரும்புவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர தொடருந்து சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் நதீர மனோஜ் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம் காரணமாக இன்று எவ்வித காரியாலய தொடருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க