உள்நாட்டு செய்திகள்புதியவை

வாகன நெரிசலால் பொருளாதாரம் பாதிப்பு: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

வாகன நெரிசல் ஊடாக சமூகம் பாரிய அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு ஒரே தீர்வு பொது போக்குவரத்து சேவையை மேலும் முன்னேற்ற நிலைக்குக் கொண்டு செல்வதெனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நாட்டில் தனியார் வாகனங்களுக்கு இடமளித்தால், நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வாகனங்களைப் பெற்றுக்கொடுத்தால், போக்குவரத்து துறையை மேம்படுத்த முடியாது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க