உள்நாட்டு செய்திகள்புதியவை

விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தாக்குதலில் உயிரிழப்பு!

விஷேட அதிரடிப்படைக்கான பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிய அதிகாரி ஒருவரை இனந்தெரியாதோர் சிலர் அடித்து கொலை செய்துள்ளனர்.

மாவனெல்ல பொலிஸ் பிரிவில் வசிக்கும் ரொஷான் சொமதிஸ்ஸ  என்ற 23 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விஷேட அதிரடிப்படை அதிகாரி, ஒரு வருட பயிற்சியை நிறைவு செய்துவிட்டு நேற்று மாவெனல்ல பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வருகைத்தந்துள்ளார்.

நீண்ட காலம் இளம் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ள இந்த அதிகாரி காதலியை பார்ப்பதற்காக நன்றாக குடித்துவிட்டு போதையில் சென்றுள்ளார். இதன் போது இனந்தெரியாதோர் சிலர் அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த அதிகாரி உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதன்போது அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி வீட்டிற்கு வந்து முதல் முறையாக இன்று தனது கடமைக்கு செல்லவிருந்த நிலையில் கொலை இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க