உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அக்மீமன உபனந்த கனிஷ்ட வித்தியாலத்திற்குள் அத்துமீறி உள்நுழைய முயற்சித்த ஒருவர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை சோதனையிட முயற்சித்த வேளையில் இராணுவ அதிகாரிக்கு தாக்குதல் நடத்தி துப்பாக்கியை பறிக்க முயற்சித்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க