உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

றிசாத் பதியுதீனின் மனைவியிடம் நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சஹாப்தீன் ஆயிசாவிடம் நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்தமை தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 7 பௌத்தலோக மாவத்தையைச் சேர்ந்த அவரின் வங்கி கணக்கிற்கு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வைப்பிடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க