உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வலி வடக்கு பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சந்திப்பு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மீண்டும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை நான்கு வலயங்களாக பிரித்து அதன் முதற்கட்டமாக 62 ஏக்கர் காணியினை அளந்து அப்பிரதேசத்தின் உரிமையாளர்களை இணங்காணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளையும் கௌரவ ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து துரிதமாக அக்காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வடமாகாண நிலஅளவை திணைக்கள அதிகாரிகள்,பிரதேசத்தின் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் காணி உரிமையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க