உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பொலிஸ்மா அதிபரும் கைது!

கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே அவரை கைது செய்துள்ளனர்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று (02) காலை அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும்,  திடீர் சுகவீனம் காரணமாக பொலிஸ் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே சி.ஐ.டியினர் அவரை கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க