உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

போதைப்பொருள் பாவித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் அடங்கிய கும்பல் கைது

மின்னேரியாவிலுள்ள ஒரு வீட்டில் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் பாவித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று பாடசாலை மாணவிகள் உட்பட ஒன்பது பேரை மின்னேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவிகள் பொலன்னறுவையிலுள்ள பிரபலமான பாடசாலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் பானத்துறையை சேர்ந்த 42 வயது பெண், 25 வயதுடைய பெண் மற்றும் புத்தளத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கிராம் ஹெராயின் போதைப்பொருள் அடங்கிய 120 பாக்கெட்களும், 150 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு அலையன் காரில் இரண்டு பெண்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கவத்துறை வளாகம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா பொலிஸ் காவல்நிலைய ஓ.ஐ.சி ஜெயவி துஷாரா, உப பொலிஸார் டெலங்கவேலா, ரஞ்சித் பெரேரா மற்றும் சுமத்ரத்னே ஆகியோர் இந்த கும்பலை சுற்றிவளைத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க