உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பொலிஸ்மா அதிபரும் வைத்தியசாலையில் அனுமதி!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (02)  ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

அதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் தீடீர் சுகவீனம் காரணமாக இன்று காலை  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க