உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹேமசிறி பெர்னாண்டோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவருக்கு வைத்தியசாலையில் இதயவியல் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க