உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கை கடலில் 4,000 இந்திய மீன்பிடிக் கப்பல்கள்

இலங்கை கடலில் தினமும் 4,000 இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சட்டவிரோதமாக கடக்கின்றன என மீன்வளத்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, தீவின் கடல் எல்லைகளைச் சுற்றி பாதுகாப்பை கடுமையாக்க கடற்படைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதாராச்சி தெரிவித்தார்.

வட கடலில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால் வடக்கில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடலை கடக்கும் இந்திய மீனவர்களின் அதிகரிப்பு, செயற்கைக்கோள் படங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க