உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பாதிப்பு

களுத்துறை – எதகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை உட்பட இரு பிள்ளைகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றூந்து ஒன்று மதில் ஒன்றுடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பயாகல பிரதேசத்தினை சேர்ந்த நபர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் களுத்துறை காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.

கருத்து தெரிவிக்க