உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினை!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது, முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வர்த்தக பூமியாக இது திகழ்கிகறது. இதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கொண்டு சென்று நியாயமானத் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் எம்.ஐ.எம்.மன்சூர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க