உள்நாட்டு செய்திகள்புதியவை

33,685 கிலோ கழிவு தேயிலை மீட்பு – சந்தேகத்தில் ஒருவர் கைது

கழிவு தேயிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் 33,685 கிலோ எடையை கொண்ட கழிவு தேயிலை இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க