உள்நாட்டு செய்திகள்புதியவை

மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது!

கடன் அட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி ஹொட்டல் ஒன்றில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மோசடியில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, கடன் அட்டை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் வங்கி கடன் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க