உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழில் 193.6 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தின் நெல்லையடி பகுதியில் 193.6 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நெல்லையடி காவல்துறை பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க