உள்நாட்டு செய்திகள்புதியவை

கூட்டமைப்பின் மீது ஜே.வி.பியின் நம்பிக்கை

மக்களுக்காக செயற்படுவதாயின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களிக்கும் என ஜே.வி.பி உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்

ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது

அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிவரும் எதிர்கட்சிக்கு இதில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணை தொடர்பில் எமக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க