உள்நாட்டு செய்திகள்புதியவை

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது!

பொலிஸார் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிகப்பட்ட பொலிஸ் அதிகாரி குளியாப்பிடிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

குறித்த பிரதேச சபையின் உப தலைவர் உட்பட இருவர் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சனிக்கிழமை இரவு சென்றுள்ளனர்.

இதன்போது பிரதேச சபை உப தலைவர் தர்க்கத்தில் ஈடுபட்டு பொலிஸார் ஒருவரை தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க